வாழ்வின் சுவை

 வாழ்வின் சுவை 

*******************

ஈருடல் ஓருயிராகி இன்ப 

விளைச்சல்வாழ்வின் சுவை  தான் வாழ்க்கை 

கருவாகி உருவாகி பிறந்தப் 

பிணி  தானே  மனிதவாழ்வு !

இன்பத்தில் விளைந்து துன்பத்தை 

அறுவடை செய்யும் செங்கரும்பு

வெட்டி நட்டாலும் தழைக்கும்

துளிர் வந்து உரசியரிக்கும்! 


இந்த உணவு வேண்டாம் 

அந்த உணவு வேண்டாம் 

மலையென சொத்திருந் தென்ன

இனிப்பு உண்ண முடியாதே!


இனிப்போ கசப்போ நதியென 

ஓடிக் கொண்டிரு பிறர்க்கு 

உதவினால் உனக்கே பேரின்பம் 

கடன்காரன் போலே மரணம் !

 

வந்து இடைமறிக்கும் ஏற்றிடு 

பிறவாதிருத் தலே சுவையாம்

அறுசுவை விருந்தன்று வாழ்வு 

மற்றவர்க்காய் வாழ்தலே சுவை.! 

செல்வம் பெரியசாமி

  தமிழ்நாடு நாமக்கல்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்