பெண்கள்.. தெய்வங்களுக்கு பிறகு.. பூக்களை பிரியப்பட்டு வைத்துக்கொள்ள தகுதியுள்ளவர்கள்..


 பெண்கள்..

தெய்வங்களுக்கு

பிறகு..

பூக்களை

பிரியப்பட்டு

வைத்துக்கொள்ள

தகுதியுள்ளவர்கள்..


உழவனுக்கு

பிறகு..

உணவுகள்

அத்தனைக்கும்

நெருங்கிய

சொந்தமிவர்கள்..


இந்த

பூமிக்கு பிறகு,,

எட்டி உதைக்குமொரு

ஜீவனை,

வாஞ்சையோடு

மடியில் தாங்கி

நடக்கும்,

பொறுமைசாலிகள்..


மேகங்களுக்கு

பிறகு..

இன்னொரு

உயிருக்காக

தனது உதிரத்தை

தானமிடும்

தியாகிகள்..


பறவைகளுக்கு

பிறகு..

தனது

கூண்டை புறக்கணித்து,

வெற்றிகரமாக

வானம் தொட்டு

திரும்பிய,

திறமைசாலிகள்..


அநேக ஆண்களால்

அழகென்றே

கருதப்பட்டாலும்..

அவர்களால்

ஊகிக்க முடியாதளவு

பேரன்பினாலும்,

பெருங்கருணையாலும்

நிரம்பியிருப்பவர்கள்

பெண்கள்...!!!


கவிதை மொழியன்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்